5096 -- Bava

5096 பவ வருடம்

5096 - ஆனி – 1994 5096 - ஆடி – 1994 5096 - ஆவணி – 1994 5096 - புரட்டாசி – 1994 5096 - ஐப்பசி – 1994 5096 - கார்த்திகை – 1994 5088 - மார்கழி – 1994 5088 - தை – 1995 5088 - மாசி – 1995 5088 - பங்குனி – 1995

*************************************************************************

5096 - ஆனி – 1994

************************************************************************* சுபாஷிதம் - 1 சஸ்த்ரைர் ஹதாஸ்து புருஷா: ந ஹதா பவந்தி பிரக்ஞா ஹதாஸ்ச்ச நிதராம், ஸூ ஹதா பவந்தி சஸ்த்ரம் நிஹந்தி புருஷஸ்ய, சரீர மேகம் பிரக்ஞா குலஞ்ச்ச விபவஞ்ச்ச, யஷஷ்ச்ச ஹந்தி பொருள்: ஆயுதங்களாலே கொல்லப்பட்ட மனிதர்கள் உண்மையில் கொல்லப்பட்டவர்களாக ஆவதில்லை. புத்தியின் மூலமாக அழிக்கப்பட்டவர்கள், முற்றிலும் அழிக்கப்பட்டவர்களாகவே ஆகிறார்கள். ஆயுதங்கள் மனிதனின் உடலை மட்டிலுமே அழிக்கின்றன. புத்தியோ குலத்தையும், செல்வத்தையும், புகழையும் சேர்ந்து அழித்துவிடுகின்றது சுபாஷிதம் – 2 வேணும்வேணு மென்றுநீர் வீணுழன்று தேடுவீர் வேணுமென்று தேடினாலு முன்னதல்ல தில்லையே வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின் வேணுமென்ற வப்பொருள் விரைந்து காணலாகுமே ---- சிவவாக்கியர் பாடல் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - ஆடி – 1994

************************************************************************* சுபாஷிதம் - 1 ந தேவா தண்ட மாதாய, ரக்ஷந்தி பஷூ பாலவத் யந்து ரக்ஷிதுமிச்சந்தி, புத்யா ஸம்விபஜந்தி தம் பொருள் தேவர்கள் தடியை எடுத்துக்கொண்டு மாடு மேய்ப்பவர்களைப் போல பாதுகாவல் செய்வதில்லை. யாரைப் பாதுகாக்க விரும்புகின்றார்களோ, அவருக்கு புத்தியை அளித்து அருள்புரிவார்கள் சுபாஷிதம் - 2 கோயில் பள்ளி யேதடா குறித்துநின்ற தேதடா வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியிற் காணலா மிறையையே சிவவாக்கியர் பாடல் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - ஆவணி – 1994

************************************************************************* ப்ரதம வயஸி பீதம் தோயமல்பம் ஸ்மரந்தஹ ஷிரஸி நீஹிதபாரா நாரிகேலா நராணாம் உதகமம்ருத கல்பம் தத்யு ராஜீவிதாந்தம் நஹிக்ருத முபகாரம் ஸாதவோ விஸ்மரந்தி! பொருள்: கன்றாக இருக்கும்போது. நீரை மனிதனின் கையால் குடித்ததை நினைவில் வைத்துக்கொண்டு, இளநீர் வடிவத்தில் தலைமேல் சுமந்து நிற்கும் தென்னை மரம். வாழ்நாள் முழுவதும் அமுதம் போலிள்ள நீரைக் [மனிதனுக்கு] கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் பெற்ற உபகாரத்தை மறக்க மாட்டார்கள் (கடமை உணர்வோடு சமுதாயத்திற்கு சேவை செய்வார்கள்) சுபாஷிதம் - 2 சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம் பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே ----- சிவவாக்கியர் பாடல் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - புரட்டாசி – 1994

************************************************************************* சுபாஷிதம் 1 உக்ரத்வம் ச ம்ருத்வம் ச ஸமயம் வீக்ஷ்ய ஸம்ஷ்ரயேத் | அந்தகாரமஸம்ஹ்ருத்ய நோக்ரோ பவதி பாஸ்கரஹ || பொருள்: நேரத்திற்கு தகுந்தவாறு கடுமையாகவோ மென்மையாகவோ இருக்க வேண்டும். சூரியன் இருளை முழுமையாக அழிக்கும் வரை மென்மையான கிரண்ங்களைச் செலுத்துகிறான். அதன் பிறகே உக்கிரமடைகிறான். சுபாஷிதம் 2 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து திருக்குறள் பொருள்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குபோல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்த போது அதன் குத்துபோல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - ஐப்பசி – 1994

************************************************************************* சுபாஷிதம் 1 உத்யந்து ஷதமதித்யாஹ உத்யந்து ஷதமிந்தவஹ | நவீனா விதுஷாம் வாக்யைஹி நஷ்யத்யாப்யந்தரம் நமஹ || பொருள்: நூறு சூரியன்கள் உதித்தாலும், நூறு சந்திரன்கள் உதித்தாலும் அறிஞர்களின் அறிவுரைகள் இல்லாமல் உள்ளே இருக்கும் இருள் நீங்குவதில்லை சுபாஷிதம் 2 அறனறிந்து மூத்த அறிவுகையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் --திருக்குறள் பொருள்: அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - கார்த்திகை – 1994

************************************************************************* சுபாஷிதம் 1 ஸ்ரீர்மங்கலாத் ப்ரபவதி ப்ராகல்ப்யாத் ஸம்ப்ரவர்த்தே ! தாக்க்ஷ்யாத்து குருதே மூலம் ஸம்யமர்தப்ரதி திஷ்ட்தி!! ----விதுரநீதி பொருள்: செல்வமானது சுபகார்யங்களால் வரும். பராக்கிரமத்தினால் அது பெருகும். புத்திசாலிதனத்தினால் அது வேரூன்றி நிற்கும். மனக்கட்டுப்பாட்டால் அது பாதுகாப்பாக இருக்கும். சுபாஷிதம் 2 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை ---திருக்குறள் பொருள்: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச்சேரும் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - மார்கழி – 1994

************************************************************************* சுபாஷிதம் 1 சங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸ்ம்வோ மனாம்ஸி ஜானதாம்! தேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜா நானா உபாஸதே !! பொருள்: தோளுடன் தோள் இணைந்து செல்லுங்கள். ஒருமித்த குரலுடன் பேசுங்கள். சமமான அறிவு இருக்கட்டும். பழைய காலத்தில் தேவர்கள் தங்களது அமிர்தத்தை எவ்வாறு பெற்றுக் கொண்டார்களோ, அதுபோலவே ஒருமித்த அறிவுடன் பணிபுரிபவர்களும் தத்தமக்கு உரிய பங்கினைப் பெற்றுக்கொள்கிறார்கள். சுபாஷிதம் 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு நன்றிது தெரிந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும் ---பாரதியார் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - தை – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 ஸமானோ மந்த்ரஸ் ஸமிதிஸ் ஸமானி ஸமானம் மனஸ் ஸஹச் சித்தமேஷாம்! ஸமானம் மந்த்ரம் அபிமந்த்ரயேவஹ ஸமானேன வோ ஹவிஷா ஜீஹோமி!! பொருள்: எனது உணவை உன்னுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வேனாக. நீ இணைந்து பணியாற்றி, எய்த வேண்டிய பலனை அடைவதற்கு நான் உறுதுணையாய் இருப்பேன். சுபாஷிதம் 2 மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரொ? --- பாரதியார் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - மாசி – 1994

************************************************************************* சுபாஷிதம் 1 ஸமானீவ ஆகூதிஹி ஸமானா ஜ்ருதயானிவஹ! ஸமானமஸ்து வோ மனோ யதா வஸ் ஸீஸஹாஸதி!! பொருள்: உங்கள் அனைவருக்கும் ஒரே சிந்தனை, ஒரே இலட்சியம் அமையட்டும். உங்கள் எல்லோரது இதயங்களும் இணைந்து பணி புரியட்டும். உங்கள் எல்லோரது மனமும் ஒருங்கிணைந்து அமையட்டும். அதன் மூலம் நீங்கள் செய்யும் பணியில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்குவீர்களாக. சுபாஷிதம் 2 தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல் மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருக்க எவங்கொலோ விரும்புவான்? தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ? --- மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் 5096 பவ வருடம் ********************************************************************************

5096 - பங்குனி – 1995

************************************************************************* சுபாஷிதம் 1 ஸச ஸர்வகுணோபேதஹ கௌஸல்யாநந்த வர்தனஹ! ஸமுத்ர இவ காம்பீர்யே ஸ்தைர்யேண ஹிமவானிவ!! ------ வால்மீகி பொருள்: அவன் (ஸ்ரீராமன்) எல்லா குணங்களும் நிறைந்தவனாக இருந்து கௌஸல்யையின் (அம்மாவின்) மகிழ்ச்சியை அதிகரிப்பவனாக இருந்தான். கம்பீரத்தில் கடல்போலவும, மன உறுதியில் இமயம் போலவும் விளங்கினான் சுபாஷிதம் 2 அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதாபேதம் வஞ்சனை, பொய், களவு சூது சினத்தையும் தவிப்பாயாகில் செய்தவம் வேறுண்டோ? ----- வள்ளலார் 5096 பவ வருடம் ********************************************************************************