5100 -- Veguthanya

5100 வெகுதான்ய

5100 - சித்திரை – 1998 5100 - வைகாசி – 1998 5100 - ஆனி – 1998 5100 - ஆடி – 1998 5100 - ஆவணி – 1998 5100 - புரட்டாசி – 1998 5100 - ஐப்பசி – 1998 5100 - கார்த்திகை – 1998 5100 - மார்கழி – 1998 சென்னை மாநகர் 5100 - மார்கழி – 1998 பாண்டி விபாக் 5100 - தை – 1999 சென்னை மாநகர் 5100 - தை – 1999 பாண்டி விபாக் 5100 - மாசி – 1999 சென்னை மாநகர் 5100 - மாசி – 1999 பாண்டி விபாக் 5100 - பங்குனி – 1999

*************************************************************************

5100 - சித்திரை – 1998

************************************************************************* சுபாஷிதம் - 1 மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம் செம்மை ஒன்றின்மை, துறவுடைமை – நன்மை திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன அறம்பத்தும் ஆன்ற குணம் ----அறநெறிச்சாரம் பொருள்: வாய்மை, பொறுமை, உயர்வு, தவம், அடக்கம், நடுவு நிலைமை தனக்கு என ஒன்று இல்லாமை, துறவு, நன்மை, மாறுபாடில்லாத நோன்பு மேற்கொள்ளல் என்ற இந்த அறங்கள் பத்தும் சிறந்த குணங்கள் சுபாஷிதம் - 2 விகாஸயதி ஸத்பாவான் விலோபயதி துர்குணான் | வினாஷயதி வித்வேஷான் கார்யம் ஸ்ங்ககனாத்மகம் || ---- ஸங்க கீதை பொருள்: நல்ல எண்ணங்களை மலரச் செய்வதும், தீய குணங்களைக் களைவதும் வெறுப்பை அழிப்பதும் சங்க வேலையின் பலனாகும். 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - வைகாசி – 1998

************************************************************************* சுபாஷிதம் - 1 அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்றிவை அருளாய் குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார் சுபாஷிதம் - 2 கதே ஷோகோ நகர்த்தவ்யோ பவிஷ்யன்னைவ சிந்தயேத் | வர்தமானேன காலேன ப்ரவர்த்தந்தே விசக்ஷனாஹா || ---சாணக்ய நீதி சாஸ்திரம் பொருள்: கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படக்கூடாது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அறிஞர்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்தித்து செயல்படுகிறார்கள் 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - ஆனி – 1998

******************************************************************************** சுபாஷிதம் - 1 நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு ---- நாலடியார் - 221 பொருள்: நாம் நல்லார் என் நம்பி ஏற்றுக் கொண்ட ஒருவரிடம் சில தவறுகள் காணப்பட்டாலும் நாம் தாங்கிக் கொள்ள வேண்டும். நெல்லுக்கும் கூட ஒரு குறை தவிடு உண்டு, நீரின் தூய்மைக்கூட நுரை என்னும் களங்கம் உண்டு. பூவிற்கும் புற இதழ் உண்டு. குறையில்லாத இடம் குறைவு எனவே நண்பர் குறை தாங்குதல் நிறை ஆகும. சுபாஷிதம் - 2 உத்யமம் சாகஸம் தைர்யம் புத்திஷ் ஷக்திஹ் பராக்ரமஹ ஷடேதே யத்ர வர்தந்தே தத்ர தேவஸ் ஸஹாய க்ருத் ----- பகவத் கீதை பொருள்: உழைப்பு, துணிவு, தைரியம், அறிவு, பலம் வீரம் இந்த ஆறு பண்புகளும் எங்கே இருக்கின்றனவோ அங்கே தெய்வம் துணை நிற்கும் 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - ஆடி – 1998

******************************************************************************** சுபாஷிதம் - 1 உண்ணலும் உனதே உயிர்த்தலும் உனதே உடல் உயிர் மனம் எல்லாம் உனதே எண்ணலும் உனதே இச்சையும் உனதே என் செயல் பயன் எல்லாம் உனதே ----- ராமகிருஷ்ண தபோவன பஜனைப் பாடல் சுபாஷிதம் - 2 அதிஷ்டானம் ததா கர்தா கரணஞ்ச ப்ருதக்விதம் விவிதாஷ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் --- பகவத்கீதை பொருள்: எடுத்த காரியத்தில் வெற்றி கிடைப்பதற்கு இடம்(ஆதாரம்), பணி செய்கிறவர், பல்வேறு கருவிகள், விதவித முயற்சிகள் இவற்றிற்குப் பிறகு தெய்வம் ஐந்தாவதாக விளங்குகிறது. 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - ஆவணி – 1998

************************************************************************* சுபாஷிதம் - 1 நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை – தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றாதவம் கல்வி ஆள்வினை என்றிவற்றால் ஆகும் குலம் ----- நாலடியார் சுபாஷிதம் - 2 ஜாதி மாத்ரேன கிம் கஸ்சித் தன்யதே பூஜ்யதே க்வசித் வ்யவஹாரம் பரிக்ஞாய வத்ய(ஹ்) பூஜ்யோ(அ)தவா பவேத் ---- இதோபதேசம் பொருள்: ஜாதியை மட்டும் வைத்து எவரையும் பெருமைக்குரியவர் என்றோ, போற்றத்தக்கவர் என்றோ கொள்வதில்லை. ஒருவரது நடத்தையை வைத்தே அவர் தண்டனைகுரியவராகிறார் அல்லது போற்றுதலுக்குரியவராகிறார் 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - புரட்டாசி – 1998

************************************************************************* சுபாஷிதம் - 1 வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம் கலியைப் பிளந்திடக் கை ஓங்கினோம் – நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் ---- பாரதியார் சுபாஷிதம் - 2 வ்ருத்தி ப்ரலாவஸ்தேஜஸ்ச ஸத்வ முத்தானமேவ ச வ்யவஸயஸ்ச யஸ்ய ஸ்யாத் தஸ்யவ்ருத்தி பயம் குத: --- விதுர நீதி 5வது அத்யாயம் 41வது ஸ்லோகம் பொருள்: எங்கு வளரும் சக்தி, ஒளி, வலிமை, பராக்ரமம், முயற்சி, உறுதி போன்றவை காணப்படுகிறதோ அங்கு உயிர் போய்விடும் என்ற பயம் எவ்வாறு ஏற்படும்? 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - ஐப்பசி – 1998

************************************************************************* சுபாஷிதம் - 1 பாரதம் முழுவதும் ஒரு பண்பாடாம் தேசம் ஒன்று தேசியம் ஒன்று கூரிய இமயப் பனிவரை தொட்டுக் குமரி வைரைக்கும் கூறுகூறாக பகிர்ந்து பார்த்தாலும் பண்பாடின்றே தடக்கைக் கனிக்கு சாட்சிகள் வே/ண்டாம் ------ கண்ணதாசன் சுபாஷிதம் - 2 ந ராஷ்ட்ரம் ராஷ்ட்ரதாம் யாதி யத்ய ஸங்கடிதா ஜனாஹ| நிதானம் ராஷ்ட்ர பாவஸ்ய ஸூஸங்கடித ஜீவனம் || பொருள்: மக்கள் ஒருங்கிணையாமல் இருந்தால் தேசம், தேசியத்தை அடைவதில்லை. தேசிய உணர்வின் அடிப்படை ஒருங்கிணைந்த வாழ்க்கையே 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - கார்த்திகை – 1998

************************************************************************* சுபாஷிதம் - 1 உரமொருவற்கு உள்ள வெறுக்கை; அஃதிலார் மரம் மக்களாதலே வேறு ---- திருக்குறள் (600) பொருள்: ஒருவனுக்கு ஊக்க மிகுதியே திண்ணிய அறிவாகும் அவ்வூக்கமில்லாதவர் மரமே ஆவார். மக்கள் வடிவமே பிற மரத்திற்கும் இவனுக்கும் உள்ள வேறுபாடாம் சுபாஷிதம் - 2 அனிர்வேதஷ் ஷ்ரியோமூலம் லாபஸ்யச ஷுபஸ்யச | மஹான்பவத் யநிர்விண்ணஹ ஸுகம் சானந்த்யமஷ்னுதே || --- விதுர நீதி 7 – 57 ஊக்கத்துடன் உழைப்பது தான் செல்வம், லாபம் சுபம் ஆகியவற்றின் அடிப்படையாகும் உழைப்பை விடாதவன் மஹான் ஆகி எல்லையில்லாத ஆனந்தநிலை அனுபவிப்பான் 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - மார்கழி – 1998 சென்னை மாநகர்

************************************************************************* சுபாஷிதம் - 1 உற்றவர் நட்டவர் ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம் – இதில் நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை --- பாரதியார் (எங்கள் மதம்) சுபாஷிதம் - 2 யத்துஷ்கரம் யத்துராபம் யத்துர்கம் யச்சதுஸ்தரம் தத்ஸர்வம் தபஸா ப்ராப்யம் தபோஹி துரதிக்ரமம் பொருள்: எளிதில் செய்ய முடியாத வேலைகளையும் கஷ்டம் தரும் விஷயங்களையும் கடக்க முடியாத இடங்களையும் கூட கடுந்தவத்தால் சாதிக்க முடியும். எல்லாக் கஷ்டங்களுக்கும் தீர்வு தவம் தான். 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - மார்கழி – 1998 பாண்டி விபாக்

************************************************************************* சுபாஷிதம் - 1 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைத்து திருக்குறள் (738) பொருள்: மக்களிடையே நோயற்ற வாழ்வு, வறுமையற்ற செல்வம், சுருங்காத விளைச்சல் மனமகிழ்ச்சி உறுதியான பாதுகாப்பு இந்த ஐந்து அழகுகளும் கொண்டதே சிறந்த நாடு ஆகும் சுபாஷிதம் - 2 ஸ்வதேசம் பதிதே கஷ்டே தூரஸ்தா லோகயந்தியே நைவச ப்ரதிகுர்வந்தி தே நராஹ சத்ரு நந்தனாஹா பொருள்; சொந்த நாடு துன்பத்தில் இருக்கும் பொழுது விலகி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் நாட்டின் பகைவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுபவர்களாகிறார்கள் 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - தை – 1999 சென்னை மாநகர்

************************************************************************* சுபாஷிதம் - 1 ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர் ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் மானம் அற்ற விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போனதற்கு வருந்துதல் வேண்டா புண்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! ----- பாரதியார் (சரஸ்வதி தேவியின் புகழ்) சுபாஷிதம் - 2 ஷட் தோஷா ; புருஷே னேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா நித்ரா தந்த்ரிபயம் க்ரோதஹ ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா --- விதுரநீதி 1- 72 பொருள்: தூக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல் சிந்திப்பதில் நேரம் கடத்திச் செயலில் ஈடுபடாமை என்ற ஆறும் நலத்தை விரும்புகிறவனால் தவிர்க்கத் தக்கவை 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - தை – 1999 பாண்டி விபாக்

******************************************************************************** தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு ---- திருக்குறள் (731) பொருள்: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடி[ப் பொருந்தியுள்ள நாடே நாடாகும் சுபாஷிதம் - 2 ஸக்தாஹ் கர்மண்ய வித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத குர்யாத் வித்வாம்ஸததா ஸகதஹ சிகீர்ஷீர் லோக் சங்க்ரஹம் --- ஸ்ரீமத் பகவத் கீதை பொருள்: பார்த்தா பற்றுள்ளவராய் பாமரர் செயல்படுவது போல அறிஞர்கள் பறில்லாதவராய் உலகை நல்வழியில் நடத்த வேலை செய்ய வேண்டும் 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - மாசி – 1999 சென்னை மாநகர்

******************************************************************************** சுபாஷிதம் - 1 ஊக்கமும் உள் வலியும் உண்மையிற் பற்றில்லா மாக்களுக்கோர் கணமும் – கிளியே வாழத் தகுதியுண்டோ --- பாரதியார் (நடிப்பு சுதேசிகள்) சுபாஷிதம் - 2 யாத்ரு ஷைஸ் ஸந்நிவிஷதே யத்ருஷாம்ஸ் சோபஸேவதே யத்ருகிச்சேச்ச பவிதும் தாத்ருக் பவதி பூருஷஹ: --- விதுரநீதி 4 – 12 பொருள்: யாருடன் பழகுகிறானோ, யாருடன் பணிபுரிகிறானோ, எவரைப் போன்று ஆக விரும்புகிறானோ அவ்வாறே மனிதன் ஆகிறான். (நல்லோருடன் பழக நல்லோரைப் போல் ஆக விரும்ப நல்லவனாகிறான்) 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - மாசி – 1999 பாண்டி விபாக்

******************************************************************************** சுபாஷிதம் - 1 முட்களை உன்மேல் தூவிடுவோர்க்கும் மலர்களை நீவிர் தூவிட வேண்டும் மலர்களை நீவிர் கொய்வீர் ! அவரோ முட்களை நாடித் துயருறுதல் நேரும்! - கபீர்தாசர் ப்ராரப் யதேன கலு விக்ன பயேன நீசை; ப்ராரப்ய விக்ன விஹதா விரமம்தி மத்யா; விக்னைர் முஹீர் முஹீரபி ப்ரதிஹன்ய மானா; ப்ராரப்த முத்தம் குணா த பரியஜந்தி --- நீதி சாஸ்திரம் பொருள்: அதமர்கள் (சோம்பேறிகள்) கஷ்டம் வந்துவிடும் என்ற பயத்தினால் ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க மாட்டார்கள். மத்தியமர்கள் துணிந்து ஆரம்பித்து கஷ்டத்தினால் தடைபட்டு நின்று விடுவார்கள். உத்தமர்கள் எவ்வளவு கஷ்டங்கள் நேரிட்ட போதிலும் ஆரம்பித்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள் 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************

5100 - பங்குனி – 1999

******************************************************************************** சுபாஷிதம் - 1 ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உழற்றுபவர் --- திருக்குறள் (620) பொருள்: மனம் தளராது இடைவிடாது முயற்சி செய்பவர் தமக்குத் தடையாக இருக்கும் ஊழ்வினையையும் தோற்றோடச் செய்வர் சுபாஷிதம் - 2 யஸ்ய க்ருத் யம ந விக்னந்தி ஷீத முஷ்ணம் பயம் ரதி ஹி ஸம்ருத்தி ர் அஸம்ருத் திர்வா ஸ வை பண்டித உச்யதே! விதுரநீதி 1- 17 பொருள்: எவனது செயலை குளிர், வெப்பம், பயம், வேறு பொருளில் நாட்டம், வசதி, வசதிகுறைவு என்று எதுவும் இடையூறாகித் தடை செய்யாதோ அவனே அறிவாளி 5100 வெகுதான்ய வருடம் ********************************************************************************