5098 -- Dhathu

5098 தாது வருடம்

5098 - சித்திரை – 1996 5098 - வைகாசி – 1996 5098 - ஆனி – 1996 5098 - ஆடி – 1996 5098 - ஆவணி – 1996 5098 - புரட்டாசி – 1996 5098 - ஐப்பசி – 1996 5098 - கார்த்திகை – 1996 5098 - மார்கழி – 1996 5098 - தை – 1997 5098 - மாசி – 1997 5098 - பங்குனி – 1997

*************************************************************************

5098 - சித்திரை – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண நன்னயம் செய்து விடல் திருக்குறள் சுபாஷிதம் 2 ஸிம்ஹாதேகம் பகாதேகம் ஷட் ஷூனஸ்த்ரீணி கர்தபாத் வாயஸாத் பஞ்சஷிக்ஷேச்ச சத்வாரி குக்குடாதபி பஞ்சதந்திரம் பொருள்: சிங்கத்திடமிருந்து ஒன்றும் (ஒழுங்காகச் செய்தல்), கொக்கிடமிருந்து ஒன்றும் (கவனம் சிதறாமலிருப்பது) நாயிடமிருந்து ஆறும் (கொஞ்ச உணவு, கிடைத்ததில் திருப்தி, தகுந்த தூக்கம், சுறுசுறுப்பு, எஜமான பக்தி, சாகஸ குணம்), கழுதையிடமிருந்து மூன்றும் (ஓய்வில்லாமல் சுமப்பது, குளிர், வெய்யிலால் பாதிக்காதது, இன்ப, துன்பங்களில் மாறாதது), காக்கையிடமிருந்து ஐந்தும் (கெளரவமான இல்லற வாழ்க்கை, தங்க வீடு ஏற்படுத்திக் கொள்வது, தைரியமாக முயற்சிப்பது, எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது, சோம்பலின்மை) சேவலிடமிருந்து நான்கும் (எதிரியுடன் பின் வாங்காத போராட்டம், உறவினருடன் சேர்ந்து உண்ணுதல், அதிகாலையில் எழுதல், பெண்களைக் காப்பாற்ற பயமின்றிப் போராடுவது) கற்றுக் கொள்ளத் தக்கவை [அதாவது எல்லாரிடமிருந்தும் ஏதேனும் கற்றுக் கொள்ள முடியும்] 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - வைகாசி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் பட்டங்கில் உள்ள படி. ------ நல்வழி சுபாஷிதம் 2 யஸ்ய ப்ரஸாதே பத்மாஸ்தே விஜயஷ்ச பராக்ரமே ம்ருத்யுஷ்ச வஸதி க்ரோதே ஸர்வ தேஜோ மயோஹி ஸஹ ----- ஹிதோபதேசம் பொருள்: யாருடைய அருளால் (மகிழ்ச்சி கொண்டால்) செல்வம் கிடைக்குமோ, வீரத்தால் வெற்றி கிட்டுமோ, கோபம் கொண்டால் மரணத்தை ஏற்படுத்த முடியுமோ அவன்தான் ஒளிமயமானவன் 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - ஆனி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ---- பாரதியார் சுபாஷிதம் 2 ஆலோகம் தாது மந்தே ப்யோ நேத்ர தானம் விஷிஷ்யதே யேன ஜீவேன் ம்ருதோ (அ) ப்யத்ர யஷஹ் காயேன ஷாஷ்வதம் பொருள்: பார்வை இல்லாதவர்களுக்கு கண்தானம் செய்வது மிகவும் சிறப்பான தொண்டு, இப்படித் தருபவர்கள் இறந்த பிறகும் புகழ் உடம்புடன் என்றென்றும் வாழ்வார்கள் 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - ஆடி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 ஒல்வது அறிவது ஆறிந்து அதன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல் ----- திருக்குறள் (472) சுபாஷிதம் 2 கோ(அ)ஸ்தி பாரஸ் ஸ்மர்தானாம் கிம் தூரம் வ்யவஸாயினாம் கோ விதேஷஹ் ஸவித்யானாம் கஹ்பரஹ் ப்ரிய வாதினாம். பொருள்: திறமை உள்ளவருக்கு எந்த வேலையும் பாரம் இல்லை. உழைப்பாளிகளுக்கு எதுவும் தூரமில்லை. கற்றறிந்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. இனிமையாகப் பழகுகிறவருக்கு எவரும் “யாரோ” ஆவதில்லை [அவருக்கு எல்லோரும் நம்மவர்தான்] 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - ஆவணி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 புத்தேள் உலகத்து ஈண்டும் பெறல் அரிதே ஒப்புரவின் நல்ல பிற ----- திருக்குறள் [213] பொருள்: பிறருக்கு உதவுவது போன்ற பிற நற்செயல்களை விண்ணுலகிலும், மண்ணுலகிலும் பெறமுடியாது. உதவும் செயலே ஒப்பற்ற நல்ல செயலாகும் சுபாஷிதம் 2 ஆத்மார்தம் ஜீவ லோக(அ)ஸ்மின் கோன ஜீவதி மானவஹ பரம் பரோப காரார்தம் யோ ஜீவதி ஸ் ஜீவதி பொருள்: இவ்வுலகில் எவரொருவர் தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்கு உதவும் வாழ்க்கை வாழ்வாரோ அவரே உண்மையில் வாழ்கிறார் 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - புரட்டாசி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 ஊருக்குழைத்திடல் யோகம் -- நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் போருக்கு நின்றிடும்போதும் – உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம் ---- பாரதியார் வக்த்ருத்வம் கீத கானம் ச கதா கதன கெளஷலம் யத்னே நைதே(அ)தி கந்த வ்யாஹ லோக ஸங்கட கா குணாஹ --- சங்ககீதை பொருள்: பேச்சுத்திறன், பாட்டுப்பாடும் திறன், கதை சொல்கின்ற திறமை ஆகியவை மக்களை இணக்கும் குணங்கள். இவற்றை முயற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டும் 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - ஐப்பசி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதில் தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்டமுறை ---- ஆசாரக்கோவை சுபாஷிதம் 2 வானானி தஹதே வன் ஹேஹெ ஸகா பவதி மாருதஹ ஸ ஏவ தீப நாஷாய, க்ருஷே கஸ்யாஸ்தி ஸொஹ்ருதம் பொருள்: காடு தீப்பற்றி எரியும்போது வீசும் காற்று தீக்கு நண்பனாகி பரவச் செய்து விடுகிறது. அதே காற்று மெல்லிய தீபத்தை அணைத்து விடுகிறது. பலவீனமானவனுக்கு யார்தான் நண்பனாக இருப்பார்கள்? 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - கார்த்திகை – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 புத்தி யதற்கு பொருந்து தெளிவளிக்கும் சுத்த நரம்பினறல் தூய்மையுறும்; -- பித்தொழியும் தாலவழி டாதபித்தம் தத்தம் நிலை மன்னும்; அதி காலை விழிப் பின் குணத்தைக் காண் பொருள்: அதிகாலை விழிப்பதினால் புத்தி தெளிவு உண்டாகும். இரத்தம் சுத்தமாகும். அதிக பித்தம் இருந்தால் அது நீங்கும். வாத பித்த சிலெத்துமங்கள் அளவோடிருப்பதால் நோய்கள் வராது. அதிகாலையில் (4.00 – 4.30 மணி) எழுந்து பழிகி இந்த நன்மைகள் உண்டாவதை தெரிந்து கொள். சுபாஷிதம் 2 அஸதோ மா ஸத் கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஹி பொருள்: அசத்தியலிருந்து என்னை சத்திய நிலைக்கு எட்டுச் செல்வாயாக. அஞ்ஞான இருளிலிருந்து ஞான ஒளிக்கு என்னை அழைத்துச் செல்வாயாக அழிவிலிருந்து என்னை அமரத்துவ நிலைக்கு கொண்டு செல்வாயாக. அமைதி அமைதி அமைதி 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - மார்கழி – 1996

************************************************************************* சுபாஷிதம் 1 என் மனமுன் என் உடலும் என்சுகமும் என் அறமும் என் மனையும் என்மகவும் என்பொருளும் என்னறிவும் குன்றிடினும் யங்குன்றேன் கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து ---- வ உ சிதம்பரனார் பொருள்: மனை – மனைவி; மகவு – குழந்தைகள்; கூற்றுவன் - எமன் சுபாஷிதம் 1 ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச்ச் கார்யாகார்யே பயாபயே | பந்தம் மோக்ஷஞ்சயா வேத்தி புத்தி: ஸா பார்த்த ஸாத்விகீ|| --- கீதை [அத்யாயம் 18, பாடல் 30] பொருள்: எந்த செயலில் ஈடுபடுவது எதிலிருந்து விலகியிருப்பது என்றும் கார்யம் எது கார்யம் அல்லாதது எது என்பதையும் அச்சத்தையும் அச்சமின்மையையும் பந்தத்தையும் விடுதலையையும் எந்த புத்தி அறிகிறதோ அதுவே சாத்வீக புத்தியாகும் 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - தை – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 இரும்பின் இரும்பிடை போழ்ப – பெருஞ் சிறப்பின் நீருண்டார் நீரான் வாய்பூசப – தேரின் அரிய அரியவற்றார் கொள்ப- பெரிய பெரியரான் எய்தப்படும் ---- நான்மணிக்கடிகை பொருள்: இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர். சிறந்த நீருணவுகளச் சாப்பிட்டவர் நீரினால் வாய் கழுவுவர். அரிய செயல்களை அரிய முயற்சிகளால்தான் சாதிக்க முடியும். பெரிய பேறுகளை பெரியோர் அடைவர். சுபாஷிதம் 2 யதாக்நிர் தாருமத்யஸ்தோ நோத்திஷ்டேன் மதநம் விநா | விநா சாப்யாஸ யோகேந ஞான தீபஸ்ததா நஹி || பொருள்: நெருப்பு விறகில் இருப்பினும் அதனைக் கடையாவிட்டால் வெளிப்படுவதில்லை. அதுபோல முயற்சி என்ற யோக சாதனை இல்லாமல் ஞானம் என்ற ஒளி ஏற்படுவதில்லை. 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - மாசி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 தன் குணங் குன்றாத்தகைமையும் தாவில்சீர் இன் குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில் ---- திரிகடுகம் பொருள்: தன் குலச்சிறப்புக் கெடாதவாறு நடத்தலும் நல்ல குணமுடையவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்தலும் நான்மறையாளர் சொல்லியவற்றைக் கடைபிடைத்தலுமே மேலார் செய்யக்கூடியவை. சுபாஷிதம் 2 வேஷா பாஷா ஸதாசாரஹ ரக்ஷணீயம் இதம் த்ரயம் | அந்தானு கரண மன்யேஷாம் அகீர்த்தி கரமுச்யதே || பொருள்: ஆடை, மொழி, நன்னடத்தை இம்மூன்றும் பாதுகாக்கப்பட வேண்டும். பிறரைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவது பெருமையல்ல என்று கூறப்படுகிறது. 5098 தாது வருடம் ********************************************************************************

5098 - பங்குனி – 1997

************************************************************************* சுபாஷிதம் 1 பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம் முட்டுடைத் தாகி இடைதவிர்த்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று --- பழமொழி நானூறு பொருள்: அறம் செய்பவர் குறுக்கிடும் இடர்களைக் கருதி இடையிலே அதனை நிறுத்தி விடுதல் கூடாது தொடங்கியதை முழுவதும் செய்து பயன்பெற வேண்டும் சுபாஷிதம் 2 புத்திர்யஸ்ய பலம் தஸ்ய நிர்புத்தேட்து குதோ பலம் வனேஸிம்ஹோ மதோன் மத்தஹ ஷஷகேன நிபாதிதஹ ----- பஞ்சதந்திரம் பொருள்: புத்தி யாருக்கு உண்டோ அவன் சக்தி வாய்ந்தவன். புத்தியில்லாதவனுக்கு பலம் எப்படிப் பயன் படும்? காட்டில் மதம் பிடித்த சிங்கத்தை ஒரு முயலே தோற்கடித்தது. 5098 தாது வருடம் ********************************************************************************