5108 -- Viya

5108 விய வருடம்

5108 - சித்திரை – 2006 5108 - வைகாசி – 2006 5108 - ஆனி – 2006 5108 - ஆடி – 2006 5108 - ஆவணி – 2006 5108 - புரட்டாசி – 2006 5108 - ஐப்பசி – 2006 5108 - கார்த்திகை – 2006 5108 - மார்கழி – 2006

*************************************************************************

5108 - சித்திரை – 2006

************************************************************************* சுபாஷிதம் 1 யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரக்ஞா ஷாஸ்த்ரம் தஸ்ய கரோதிகிம் லோசநாப்யாம் விஹீநஸ்ய தர்பணம் கிம் கரிஷ்யதி பொருள்: சுய அறிவு இல்லாதவனுக்கு எவ்வளவுதான் சாஸ்த்ரம் புகட்டினாலும் ஒரு பயனும் இருக்காது. பார்வை இல்லாதவனுக்கு கண்ணாடியால் என்ன செய்ய இயலும்? [சுய அறிவு என்பது கண்களுக்கும், சாஸ்த்ரம் என்பது கண்ணாடிக்கும் ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது] சுபாஷிதம் 2 இடர் வரும் போதும் – உள்ளம் இரங்கிடும் போது உடன் பிறந்தவர் போல் – மாந்தர் உறவு கொள்பவாரப்பா! நன்மை செய்பவரே – உலகம் நாடும் மேற்குலத்தோர் திண்மை செய்பவரே – அண்டித் தீண்ட ஒண்ணாதார் --- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 5108 விய வருடம் ********************************************************************************

5108 - வைகாசி – 2006

************************************************************************* சுபாஷிதம் 1 மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம் பொருள்: மகான்களுடைய சிந்தனை, சொல், செயல், இவை எப்பொழுதும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் துர்ஜனங்களுடையதோ சிந்தனை வேறு, சொல் வேறு, செயல் வேறாக இருக்கிறது. சுபாஷிதம் 2 மனம்வேறு, சொல்வேறு மனுதொழில் வேறு வினைவேறு பட்டவர்போல் மேவும்; அனமே மனமொன்று சொல்லொன்று வான்பொருளும் ஒன்றே கணம் ஒன்று மேலவர்தம் கண் ---- நீதிவெண்பா (மேவும் – பொருந்தும், அனமே – அன்னமே, கனம் – மதிப்பு, பெருமை, மேலவர் – உயர்வுமிகு சான்றோர்) 5108 விய வருடம் ********************************************************************************

5108 - ஆனி – 2006

******************************************************************************** சுபாஷிதம் 1 அந்த ஷாஸ்த்ரம் பஹீலாஷ்ச வித்யாஹ அல்பஷ்ச காலோ பஹூவிகநதாச யத்ஸார்பூ தம் ததுபாஸநீயம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமத்யாத் ---- சாணக்ய நீதி பொருள்: சாத்திரங்கள் எண்ணற்றவை; கல்வி கணக்கிலடங்ககாதவை; ஆயுட்காலமோ மிகவும் குறுகியது; வாழ்க்கை நிறையத் தடைகளைக் கொண்டது. எனவே ஆராய்ந்து பார்த்து பாலிலிருந்து நீரைபிரித்து பருகும் அன்னம் போல நாமும் வழ்விற்குரியவற்றை தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ள வேண்டும். சுபாஷிதம் 2 கல்வி கரையில; கற்பவர்; நாள் சில; மெல்ல நினைக்கின் பிணிபல - தென்னிதின் ஆராய்ந் தமைவுடைய தற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து ---- நாலடியார் [135] (குருகு = அன்னப் பறவை) 5108 விய வருடம் ********************************************************************************

5108 - ஆடி – 2006

******************************************************************************** சுபாஷிதம் 1 ஸம்ஸார விஷவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே காவ்யாம்ருத ரஸாஸ்வாத ஜ ஆலாபஸ் ஸஜ்ஜனநஹி ஸஹ பொருள்: பிறவியாகிய விஷமரத்தினுடைய அம்ருதத்திற்கு ஒப்பான இரண்டு கனிகள் அம்ருத சுவையுடைய நூலும், நன்மக்களுடன் உரையாடலும் ஆகும் சுபாஷிதம் 2 அல்லலுறும் இவ்வுலகாம் ஆரணியத்து ஒரிரண்டே நல்ல கனிகள் நாடுமினொ சொல்லின் ஒன்று நூல் ஆகும்; மற்றொன்றோ நுண்ணறிவு சீலமிக்க மேலோர் நட்பாகுமிது மெய் ----- தர்மதீபிகை . 5108 விய வருடம் ********************************************************************************

5108 - ஆவணி – 2006

************************************************************************* சுபாஷிதம் 1 லக்ஷ்மீர் வஸதி ஜிஹ்வாக்ரே ஜிஹ்வாக்ரே மித்த பாந்தவாஹ பந்தநம் சைவ ஜிஹ்வாக்ரே ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம் பொருள்: நாக்கின் நுனியில் திருமகள் வஸிக்கிறாள். நாக்கின் நுனியிலேயே நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். சிறைபடுதலும் (தளையும்) நாக்கின் நுனியில்தான். மரணம்கூட நிச்சயமாக நாக்கின் நுனியில் தான் இருக்கிறது. சுபாஷிதம் 2 நாநலம் என்னும் நலன் உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று --- திருக்குறள் 5108 விய வருடம் ********************************************************************************

5108 - புரட்டாசி – 2006

************************************************************************* ஷஷிநா ஷோபதே ராத்ரிஹி ஸ்ருஷ்டிஸ் சீர்யேண ஷோபதே ஸத்யேந ஷோபதே வாணீ ஸதாசாரேண ஜீவநம் பொருள்: இரவு சந்திரனால் விளங்குகிறது; உலகமானது சூரியனால் விளங்குகிறது; வாக்கு உண்மை பேசுவதால் விளங்குகிறது. வாழ்வு ஸதாசாரத்தால் (நல்லொழுக்கத்தால்) சிறப்புற்று விளங்குகிறது சுபாஷிதம் 2 பொய் சொல்லக்கூடாது பாப்பா என்றும் புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா தெய்வந் நமக்குத் துணை பாப்பா – ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா ----- மஹாகவி பாரதியார் 5108 விய வருடம் ********************************************************************************

5108 - ஐப்பசி – 2006

************************************************************************* சுபாஷிதம் 1 ஆலஸ்யம்ஹி மனுஷ்யாநாம் ஷரீரஸ்தோ மஹான் ரிபுஹீ நஸ்த்யுத் யமஸோ பந்து ஹீ க்ருத்வாயம் நாவஸீததி பொருள்: ஒவ்வொருவரிடத்திலும் இருக்கும் மிகப்பெரிய எதிரி அவரது சோம்பேறித்தனம். நமக்கு உண்மையான நண்பன் – உழைப்பு; இதனை நம்பி செயல் புரிந்து கெட்டுப் போனவர்கள் யாருமில்லை. சுபாஷிதம் 2 சங்கரர் காசியில் அங்கென்ன சொன்னார் சண்டான் பக்தனும் தங்குரு என்றார் எங்கள் ராமானுஜர் தங்குல மென்றே யாரையும் தொண்டுடன் கோவிலுள் சென்றார் காட்டொடு வேடனைத் தம்பியென் றெஉதிக் கழுஜினைத் தந்தை யெனக் கடன் செய்து சேட்டைக் குரங்கையும் தன்னுடன் சேர்த்து ஸீதாபி ராமனும் செய்ததைப் பார்த்தோம் ------ ஹிந்துவின் தர்மம் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 5108 விய வருடம் ********************************************************************************

5108 - கார்த்திகை – 2006

************************************************************************* சுபாஷிதம் 1 ந ராஜ்யம் ந ச ராஜாஸீத் ந தண்ட்யோ ந ச தாண்டிகஹ தமேணைவ ப்ரஜாஸ் ஸர்வாஹ ரக்ஷந்திஸ்ம பரஸ்பரம் பொருள்: அரசு இருக்கவில்லை; அரசனில்லை; தண்டனை இல்லை; குற்றவாளியில்லை, தர்மத்தின் மூலமே ஒவ்வொருவரும் பரஸ்பரம் காப்பாற்றிக் கொண்டனர். சுபாஷிதம் 2 நல்லதை எண்ணுவதே நன்மனத்துக் கான அணி நல்லதைப் பேசுவதே நாவணி – நல்லதைச் செய்வதே தேகத்தின் சீரணி இம்மூன்றும் எய்தினர் உய்தி இவண் ---- அணுயறுபது 5108 விய வருடம் ********************************************************************************

5108 - மார்கழி – 2006 சென்னை மாநகர்

************************************************************************* சசுபாஷிதம் 1 ஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா பித்ருபூஹீ புண்யபூ ஷ்சைவ ஸவை ஹிந்து ரிதி ஸ்ம்ருதஹ பொருள்: சிந்து நதி தொடங்கி கடல்கள் சூழ்ந்த பகுதி வரைக்கும் உள்ள தந்தையர் நாடுதான் எல்லா மதங்களின் தாயகம். பாரத பூமியை எவன் தன் புண்ய பூமியாக கருதுகிறானோ அவனே ஹிந்து. வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில் வழுங்குமரி முனை பாப்பா கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா ---- மஹாகவி பாரதியார் 5108 விய வருடம் ********************************************************************************