5109 சர்வஜித்து
5109 - வைகாசி – 2007 5109 - ஆனி – 2007 5109 - ஆடி – 2007 5109 - ஆவணி – 2007 5109 - புரட்டாசி – 2007 5109 - ஐப்பசி – 2007 5109 - கார்த்திகை – 2007 5109 - மார்கழி – 2007 5109 - தை – 2008 5109 - மாசி – 2008 5109 - பங்குனி – 2008
******************************************************************************** 5109 - வைகாசி – 2007
************************************************************************* சுபாஷிதம் 1 தர்மார்த ப்ரபவதே தர்மாத் ப்ரபவதே ஸுகம் தர்மேன லபதே ஸ்ர்வம் தர்ம ஸாரமிதம் ஜகத் ----- இராமாயணம் அயோத்யா காண்டம், பொருள்: பொருளும் இன்பமும் தர்மத்தினாலேயே கிடைக்கின்றன. எல்லா ஆசைகளும் தர்மத்தினாலேயே நிறைவேறுகிறது. தர்மமே உலகிற்கு ஆதாரம். வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மநிலங் காக்கும் மதியே சக்தி தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி ‘சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணையளக்கும் விரிவே சக்தி ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி ----- சுப்ரமணிய பாரதியார் 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - ஆனி – 2007
******************************************************************************** சுபாஷிதம் 1 நிஷ்சித்ய ய(ப்) ப்ரக்ரமதே நாந்தர்வஸதி கர்மணஹ அவந்த்ய காலோ வஸ்யாத்மா ஸ் வை பண்டித உஸ்யதே|| ----- விதுர நீதி பொருள் துவக்குவதற்கு மு வேலையினை முடிவு செய்பவர், இடையில் வேலையை நிறுத்தாமல் இருப்பவர், நேரத்தை விணடிக்காமல் இருப்பவர், மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் எவரோ அவரே அறிஞர் என அழைக்கப்படுகிறார். சுபாஷிதம் 2 துன்பம் உவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை ---- திருக்குறள் (669) பொருள்: செயல் தொடங்கும் பொழுது இடையூறும் துன்பமும் ஏற்பட்டாலும் அதற்காகத் தளர்ந்து விடாமல், செயல் முடியும் போது ஏற்படும் வெற்றி மகிழ்ச்சியும் இன்பமும் கருதி செயல்பட வேண்டும். எடுத்த காரியத்தை இனிது முடித்தால் வரும் மன அமைதியும் மகிழ்ச்சியும் ஈடு இணை அற்றவை. 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - ஆடி – 2007
******************************************************************************** சுபாஷிதம் 1 ஜீவனே யாவதா தானம் ஸ்யாத் ப்ரதானம் ததோதிகம் இத்யாஷா ப்ரார்த் தனாஸ்மாகம் பகவன் பரிபூர்யதாம் பொருள்: வாழ்க்கையில் நாம் பெறுவதை விட கொடுப்பதே அதிகமாக இருக்க வேண்டும். இந்த எங்களது ப்ரார்த்தனையை கடவுள் நிறைவேற்றட்டும். சுபாஷிதம் 2 வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுன் யானையால் யனை யாத்தற்று ----- திருக்குறள் பொருள்: ஒரு திட்டத்தை அல்லது காரியத்தை நிறைவேற்றும் போது அதன் வழியே அதனோடு தொடர்புடைய அல்லது இணையான மற்றொரு திட்டத்தையும் செய்து முடித்துக் கொள்வது, ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போல. 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - ஆவணி – 2007
************************************************************************* சுபாஷிதம் 1 அஸ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவச் நைவச அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துபல காதகஹ --- ஹிதோபதேசம் பொருள்: பலி கொடுப்பது குதிரையை அல்ல, யானையையும் அல்ல; புபியையோ அல்லவே அல்ல. ஆட்டுக்குட்டியைத்தான் பலி கொடுக்கிறார்கள். அதாவது பலமற்றவர்களுக்கு கடவுளால் கூட திமை ஏற்படுகிறது சுபாஷிதம் 2 மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய் வாரின் தலை திருக்குறள் [295] பொருள்: எண்ணத்தாலும் பேச்சாலும் தூய்மை உடையவன் தானம், தவம் முதலியன செய்யும் பெரியோரைக் காட்டிலும் தலை சிறந்தவன். வெளிப்படியயாகத் தோன்றும் தவம், தானம் முதலியவற்றை விட, உள்ளூர அமைந்துள்ள வாய்மையே பெரிதும் மதிக்கப்படும் 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - புரட்டாசி – 2007
************************************************************************* சுபாஷிதம் 1 ஸமுத்ர வஸனே தேவி பர்வதஸ்தன மண்டலே விஷ்ணுபத்நி நமஸ்துப்யம் பாதஸ்பர்ஷம் க்ஷமஸ்வமே’ பொருள்: சமுத்ரத்தை ஆடையாக அணிந்தவளும், மலைகளை மார்பகங்களாக கொண்டவளும், விஷ்ணுவின் மனைவியுமான அன்னையே உன்னை வணங்குகிறேன். எனது கால்கள் உன் மீது படுகின்றது. அதற்காக என்னை மன்னிக்கவும். சுபாஷிதம் 2 தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் பாரதியார் 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - ஐப்பசி – 2007
************************************************************************* சுபாஷிதம் 1 அபார பூமி விஸ்தாரம் அகண்ய ஜன சங்குலம் ராஷ்ற்றம் சங்கடநாஹீநம் ப்ரப்வேந்நாத்ம ரக்க்ஷணே|| பொருள்: எல்லையில்லாத பரந்து விரிந்த நிலப்பகுதி, எல்லையில்லாத அளவு மக்களின் எண்ணிக்கை இருந்தாலும் – ஒற்றுமையாக இல்லையென்றால் நாடு தன்னை காத்துக்கொள்ள இயலாது சுபாஷிதம் 2 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடையும் துன்பம் துன்பத்தில் பட்டு அழியும். மனவலிமை உடையவனிடம் துன்பம் படுதோல்வி அடையும் என்பது வலியுறுத்தப்பட்டது 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - கார்த்திகை – 2007
************************************************************************* சுபாஷிதம் 1 தனதான்ய ஸூகஸம்பன்னம் ஸ்வர்ண ரத்ன மயாகரம் ஸூஸம்ஹதிம் விநா ராஷ்ற்றம் ந பவேத் விபவாஸ்பதம் பொருள்: செல்வம் தான்யம் நிறைந்திருக்கலாம் – தங்கம், ரத்னம் கொட்டியிருந்தாலும் – நல்ல ஒற்றுமை இல்லாத பட்சத்தில் நாடு முன்னேற்றம் அடைய முடியாது சுபாஷிதம் 2 ஆரியர் இருமின் ! ஆண்கள் இங்கு இருமின்! வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்! மானமே பெரிதென மதிப்பவர் இருமின்! ஈனமே பெறாத இயல்பினர் இருமின்! தாய் நாட்டன்புறு தனயர் இங்கு இருமின்! சுப்ரமண்ய பாரதியார் 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - மார்கழி – 2007
************************************************************************* சுபாஷிதம் 1 ரத்னாகரா தௌதபதாம் ஹிமாலய கிரீடினீம் ப்ரம்மராஜரிஷி ரத்னாட்யாம் வந்தே பாரதமாதரம் பொருள்: எந்த பாரத அன்னையின் கால்களைக் கடல் நனைக்கிறதோ, எந்த அன்னை இமயலையை கிரீடமாக அணிந்திருக்கிறாளோ, ப்ரம்ம ரிஷிகள் ராஜரிஷிகள் எங்கின்ற செல்வங்களை உடையவளான அந்த பாரத அன்னைக்கு வணக்கம். சுபாஷிதம் 2 தோளை வலியுடைய தாக்கி – உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி வாளைக் கொண்டு பிளந்தாலும் – கட்டு மாறா வுடலுறுதி தந்து – சுடர் நாளைக் கண்டதோர் மலர்போல் – ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து – மத வேளை வெல்லுமுறை கூறித் – தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் ---- பாரதியார் பாடல் 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - தை – 2008
******************************************************************************** சுபாஷிதம் 1 ந ராஷ்ட்ரம் ராஷ்டதாம்யாதி யத்ர அசங்கடிதா ஜநா; நிதானம் ராஷ்ற்ற பாவஸ்ய சு சங்கடித ஜீவனம் பொருள்: மக்கள் ஒற்றுமை இல்லையெனில் நாடு நாடாகாது. நல்ல ஒற்றுமை வாழ்வே தேச உணர்வுக்கு அடிப்படை சுபாஷிதம் 2 மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியால் வென்று விடல் ---- திருக்குறள் (158) பொருள்: செருக்காலும் மடமையாலும் தமக்குக் கொடுமை பல செய்தவர்களை மிகுந்த பொறுமையால் வெற்றி கொள்ளல் வேண்டும். பொறுத்துக் கொள்வது தோல்வியாகாது. அதுதான் உயர்ந்த வெற்றி எவ்வகையிலிம் நாம் தரம் தாழ்ந்துவிடக் கூடாது 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - மாசி – 2008
******************************************************************************** சுபாஷிதம் 1 ஜனனி ஜனகஷ்சைவ ஜன்ம பூமிர் ஜனார்தன: ஜீவோ ஜயஸ்ச ஜனதா ஸேவாஏதே ஸகௌரவம் பொருள்: ஜனனி (தாய்) ஜனக (தந்தை) ஜன்மபூமி (பிறந்த நாடு) ஜனார்த்தன (இறைவன்) ஜீவ (வாழ்வு) ஜய (வெற்றி) மற்றும் மக்கள் (சமுதாயம்) இவர்களுக்கு தொண்டு மிகுந்த மரியாதையுடன் செய்ய வேண்டும் சுபாஷிதம் 2 தீரத்தி லேப்படை வீரத்திலே – நெஞ்சில் ஈரத்திலே உப காரத்திலே சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு தருவதிலே உயர் நாடு பாரதியார் பாடல் 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************5109 - பங்குனி – 2008
******************************************************************************** சுபாஷிதம் 1 நாஸ்தி வித்யாஸமம் சக்ஷூ; நாஸ்தி சத்ய சமம் தப: நாஸ்தி ராக ஸமம் துக்கம் நாஸ்தி த்யாக சமம் சுகம் பொருள்: கல்விக்கு இணையான கண்கள் இல்லை, உண்மைக்கு இணையான தவம் இல்லை. ஆசைக்கு இணையான துன்பம் இல்லை. தியாகத்திற்கு இணையான சுகம் இல்லை. சுபாஷிதம் 2 செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத் தானெனும் பேய்கெடவே – பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படவே வானெனும் ஒளிபெறவே – நல்ல வாய்மையி லேமதி நிலைத்திடவே தேனெனப் பொழிந்திடுவீர் – அந்தத் திருமகள் சினங்களைத் தீர்ந்திடுவீர் ஊனங்கள் போக்கிடுவீர் – நல்ல ஊக்கமும் பெருமௌயும் உதவிடுவீர் ----- பாரதியார் பாடல் 5109 சர்வஜித்து வருடம் ********************************************************************************
5109 -- Sarvajiththu
Subscribe to:
Posts (Atom)