5088 அட்சய வருடம்
5088 - ஏப்ரல் – 1986 5088 - மே – 1986 5088 - ஜூன் – 1986 5088 - ஜூலை – 1986 5088 - ஆகஸ்ட் – 1986 5088 - செப்டம்பர் – 1986
************************************************************************* 5088 - ஏப்ரல் – 1986
************************************************************************* சுபாஷிதம் – 1 வடக்கு தெற்கு என்று பிரிக்கும் வாதம் மங்கிப் போகும் தடுக்க யாருமின்றி நாட்டில் எங்கும் தங்கலாகும் கொடுக்கல் வாங்கல் செய்ய வணிகம் கூசும் இழுக்கில்லாமல் பிடித்தமான தொழிலை எங்கும் செய்து பிழைக்கலாகும் ஒருமைப்பாடு எண்ணம் நம்முள் உறுதி கொண்டு விட்டால் அருமையென்ற எதையும் செய்யும் ஆற்றல் கண்டு விட்டோம் பெருமை கொள்ளுமாறு மக்கள் பேத உணர்ச்சி நீங்கும் உரிமையோடு நாட்டின் வளத்தை உயர்த்தும் உணர்ச்சி பொங்கும் ----- நாமக்கல் கவிஞர் வெ ராமலிங்கம் பிள்ளை சுபாஷிதம் – 2 ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து ஸரோவரம் தம்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே --- பார்ஹஸ்பத்ய சாஸ்த்ரம் பொருள்: இமய முதல் சமுத்திரம் வரை பரந்துள்ள ஹிந்துஸ்தானம் இறைவனால் உருவாக்கப்பட்ட தேசம், நம் கண் முன் உள்ளது. 5088 அட்சய வருடம் ********************************************************************************5088 - மே – 1986
************************************************************************* சுபாஷிதம் – 1 அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே --- நம்மாழ்வார் திருவாய்மொழி பொருள்: அவரவர் தமது தமது அறிவுகளுக்குத் தோன்றிய வகைப்படியே அந்தந்த தெய்வ வடிவங்களை இறையவர் என அடிபணிவார்கள்; அவரவர் தெய்வங்கள் குறையுடையவரே அல்லர்; ஓர் இறைவரே அவரவருடைய விதிப்படியே அடையும் படி நின்று அருள் புரிகிறார் சுபாஷிதம் – 2 வானம் துளங்கில் என்? மண் கம்பமாகில் என்? மால் வரையும் தானம் துளங்கித் தலைதடு மாறில் என்? தண் கடலும் மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்? வேலை நஞ்சுண்டு ஊனமொன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே ----- திருநாவுக்கரசர் தேவாரம் பொருள்: (வானம் – ஆகாயம் ; துளங்கல் – அச்சம் தரும்படி இடி இடித்தல், வீழ்தல் ; மண் கம்பம் – நில நடுக்கம்; மால் வரை – பெரிய மலை; தானம் – இடம்; துளங்கல் – அசைதல்; தலை தருமாறல் – இடம் விட்டுப் பெயர்தல்; மீனம் – நட்சத்திரங்கள் ; படில் – வீழ்ந்தால் ; சுடர் – சூரியனும், சந்திரனும் ; வேலை – கடல் ; ஊனம் – தீங்கு ) பக்தி நிறைந்த லட்சியவாதியை எதுவும் சித்தம் கலங்கச் செய்ய முடியாது என்று பொருள் 5088 அட்சய வருடம் ********************************************************************************5088 - ஜூன் – 1986
************************************************************************* சுபாஷிதம் – 1 பாஞ்சால வீரன் பகவத் சிங்கம் பதறி மடிந்ததைக் கேட்டவுடன் பாண்டியர் சீமையில் வீரரெல்லாம் பட்டாளம் சேர்ந்தது ஏதுக்கம்மா? தங்கமாராட்டியத் திலக மகான் தண்டனை பெற்றதைத் தங்கவில்லை எங்கள் தமிழ்ப்படை, தோள்தட்டியே ஏனென்று கேட்டது வெள்ளையனை எத்தனை எத்தனை தியாகப் பரம்பரை ஏதுக்கு இப்படிப் பாடுபட்டார்? இத்தவ நாடு ஒற்றுமை யாலே என்றுமே வாழ்ந்திட வேண்டுமன்றோ? ---- எஸ். டி. சுந்தரம் சுபாஷிதம் – 2 வதனம் ப்ரஸாத ஸதனம்; ஸதயம் ஹ்ருதயம் ஸூதாமுசோ வாசஹ கரணம் பரோபகரணம் யேஷாம் கேஷாம் நதே வந்த்யாஹா பொருள்: எப்போதும் மலர்ந்த முகம்; இதயத்திலோ கருணை பொங்கும்; வாக்கிலே அமுது சிந்தும் ; எப்போதும் பிறர்க்கு உதவிகரமாக இருப்பார் - இப்படிப்பட்ட வரை யார் தான் போற்றமாட்டார்கள்? 5088 அட்சய வருடம் ********************************************************************************5088 - ஜூலை – 1986
************************************************************************* சுபாஷிதம் – 1 கற்புடைப் பெண்கட் கெல்லாம் கணவனே தெய்வ மென்பார்; சொற்பொருள் அறிந்தோர்க் கெல்லாம் சொன்ன சொல் தெய்வ மென்பார்; மற்பெரும் வீரர் கெல்லாம் மானமே தெய்வ மாகும்; நற்பெயர் நாட்டிற் காக்கும் நமக்கிந்த கொடியே தெய்வம். ---- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சுபாஷிதம் – 2 கலி; சயனோ பவதி, ஸஞ்ஜிஹானஸ்து த்வாபர; உத்திஷ்ட்டன் ஸத்ரேதா பவதி, க்ருதம் ஸம்பத்யத சரன் சரைவேதி! சரைவேதி!! பொருள்: உறங்குவது கலியுகம் ; கண் விழித்துப் பார்ப்பது துவாபரயுகம் ; சிலிர்த்து எழுவது த்ரேதாயுகம் ; விரைய முற்படுவது கிருதயுகம். எனவே முன்னேறிச் செல்லுங்கள், விரைந்து முன்னேறிச் செல்லுங்கள் 5088 அட்சய வருடம் ********************************************************************************5088 - ஆகஸ்ட் – 1986
************************************************************************* சுபாஷிதம் – 1 மண்ணுலகத்தில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் என்ணுறும் எனக்கே நின்னருள் பலத்தால் இசைத்த போ திசைத்த போ தெல்லாம் நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல்வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய். --- ராமலிங்க வள்ளலார் சுபாஷிதம் – 2 ஜாதி த்வேஷோ தர்ம நாசோ தேச துரோகஹ ஸ்வவிஸ்ம்ருதிஹி யத்ர ப்ரவர்ததே தத்ர சங்க தர்மோஹி தரகஹ. பொருள்: ஜாதிக் காழ்ப்புணர்வு, க்தர்மத்தின் அழிவு, தேச துரோகம், நாம் யார் என்பது பற்றிய உணர்வின்மை – இவை மண்டிக்கிடக்கும் இடத்தில் சங்க நெறிதான் அருமருந்து 5088 அட்சய வருடம் ********************************************************************************5088 - செப்டம்பர் – 1986
************************************************************************* சுபாஷிதம் – 1 உண்மை அரிச்சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவிய பொன்னாடு கண்ணன் விளையாடலெல்லாம் கண்டு களி நாடு கண்ணனொடு பஞ்சவர்கள் காத்த தனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம் வளர்நாடு தகைமையுறு வள்ளுவர்தம் தமிழ் பிறந்த நாடு பண்அமரும் கரிகாலன் பரித்த புகழ் நாடு பகைவர்களும் தொழுதேத்தும் பாரத நன்னாடே ------- திரு.வி.க [பண் அமரும் கரிகாலன் பரித்த – புலவர்களால் பாடப் பெற்றவனாகிய கரிகாலன் ஆண்ட] சுபாஷிதம் – 2 தைவா வலம்பினஹ் கேசித், கேசித் தேவா வலம்பினஹ சங்க கார்ய ப்ரவ்ருத்தாஸ்யுஹு புருஷார்த்த வலம்பினஹ பொருள்: சிலர் அதிருஷ்டத்தை நம்பியிருப்பார்கள்; இன்னும் சிலர் கடவுளை நம்பியிருப்பார்கள்; சங்கப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் உழைப்பை நம்பி இருப்பார்கள் 5088 அட்சய வருடம் ********************************************************************************
5088 -- Atchaya
Subscribe to:
Posts (Atom)